ஜப்பானைச் சென்றடைந்த சிறிது நேரத்தில், அவர் பதிவிட்ட முதலாவது டுவிட்டர் பதிவில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஆயுதப் பரிசோதனைகளால் தமது மக்களில் சிலரும் ஏனையோரும் குழப்பமடைந்ததாகவும் இருப்பினும் தாம் குழப்பமடையவில்லை எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் தமக்களித்த வாக்குறுதிகளை மீற மாட்டாரென தாம் உறுதியுடன் இருப்பதாகவும் ட்ரம்ப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், வட கொரியாவின் சோதனைகள் ஐ.நா. தீர்மானங்களை மீறுவதாக, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் நேற்றைய தினம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.