தலைநகர் டெஹ்ரானில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போதே அவர் இவ்வாறு யோசனை கூறியுள்ளார்.
அவர் தெரிவிக்கையில், “கடந்த 2004ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமெரிக்காவுடன் அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில் கையொப்பமிடுவதற்கு முன்னதாகவே இவ்விவகாரம் தொடர்பாக நமது நாட்டு மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என நான் வலியுறுத்தி இருந்தேன். அதற்கு ஹயாத்துல்லா கமேனியும் சம்மதம் தெரிவித்தார்.
ஆனால், அப்போது பொது வாக்கெடுப்பு நடத்தப்படாவிட்டாலும் இதைப்போன்றதொரு பொது வாக்கெடுப்பு என்பது எந்நேரத்திலும் எமக்கு சிறந்த தீர்வை அளிக்கக் கூடியதாக அமையும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுடனான அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேச நாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத் துறையின் சார்பில் நிர்ப்பந்திக்கப்படுகிறது.
அணுவாயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் முடிவால் உலகளாவிய அளவில் தங்கள் நாட்டின் மீதான நன்மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக ஹசன் ரௌஹானி தெரிவித்தார்.
அமைதியான முறையில் ஆக்கப்பூர்வமான தேவைகளுக்கு யூரேனியத்தை செறிவூட்டும் உரிமை ஈரானுக்கு உள்ளதாக தெரிவித்துள்ள ரௌஹானி, அமெரிக்காவின் அழுத்தத்துக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என்றும் எங்கள் நாட்டின் சுதந்திரத்தையும், இஸ்லாமிய நன்முறைகளையும் பாதுக்காக்க ஒருநாளும் தவற மாட்டோம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, சில இடங்களில் ஈரான் அரசு ரகசியமாக அணு உலைகளை அமைத்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை குற்றம்சாட்டி வருகிறது.
எனினும், அமெரிக்காவுடன் தான் செய்த ஒப்பந்தத்தை ஒழுங்கான முறையில் நிறைவேற்ற ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தவறி விட்டதாக அந்நாட்டின் முதுபெரும் தலைவரான ஹயாத்துல்லா கமேனி சமீபத்தில் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.