
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.
கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தி.மு.க. மக்களவை குழு தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தேரிவு செய்யப்பட்டார். அத்துடன் தி.மு.க. மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு செய்யப்பட்டார்.
மேலும், தி.மு.க. மக்களவை குழுவின் துணைத் தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
இதேபோல், தி.மு.க. மாநிலங்களவை குழுத் தலைவராக திருச்சி சிவா தெரிவு செய்யப்பட்டதுடன் மாநிலங்களவை தி.மு.க. கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவன் தேர்வு செய்யப்பட்டார்.
