
இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்நிகழ்வை சிவசேனை அமைப்பு ஒழுங்கமைத்திருந்தது.
இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், இந்தியாவின் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், பா.ஜ.க பிரமுகர், யாழ். இந்திய துணைத்தூதர், யாழ். மாநகரசபை முதல்வர், ஆணையாளர், அரசியல் பிரமுகர்கள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
யாழ்ப்பாணம் இராச்சியத்தை ஆண்ட கடைசி தமிழ் மன்னனான, சங்கிலியனின் 400 ஆண்டுகளின் முன்பான ஆட்சி நிறைவின் பின்னர் ஈழத்தமிழர் காலனியாதிக்கவாதிகளிடம் தமது இறைமையை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
