LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, May 27, 2019

கனடாவின் – மொன்ட்றியலைச் சேர்ந்த ஜோசஸ் அவாட் என்பவர் பிரெஞ்சு மொழியை பெரும்பாலும் பேசும் மொழியாக பயன்படுத்திய போதும் அவர் அரபிக், ஆங்கிலம், ஜப்பானிய மொழிகள் உட்பட 15 க்கும் மேற்பட்ட மொழிகளில் பேசும் திறமையை கொண்டுள்ளார். 20 வயதான குறித்த இளைஞர் அதிகபட்சமாக 19 மொழிகளை சாதாரண பேசும் வல்லமையை பெற்றுள்ளார். இவற்றில் பெரும்பாலானவை அவர் இணையம் காணொளிகள், இசை மற்றும் நண்பர்களுடனான உரையாடலின் போது அதிகளவில் பயன்படுத்துபவையாகும். தனது திறமை பற்றி குறித்த இளைஞர் கூறுகையில், “நான் மிகவும் கிரகிக்கும் திறமையை கொண்ட மாணவன், அதனால் நான் மொழியறிவை மேற்படுத்துவதற்காக காணொளிகள், திரைப்படங்கள் மற்றும் இசை வடிவங்களை கேட்பது உள்ளிட்ட செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறேன் அத்துடன் உரையாடல்களைக் கேட்பது, நண்பர்களுடன் கலந்துரையாடுவது உள்ளிட்ட செயற்பாடுகள் மூலம் மொழிக்கு என்னால் முடிந்த அளவிற்கு நியாயத்தை வழங்க முயற்சி செய்கிறேன் “என்று அவர் செவ்வியொன்றில் கூறினார். குறித்த இளைஞர் மென்டரின், ஸ்பெனிஸ், போர்த்துக்கல், இத்தாலியன், ஜேர்மனி, ரஷ்ய மொழி, ஹீப்ரு, ரோமானிய மொழி, சுவீடன், ஜோர்ஜியன், ஆர்மேனியன், கென்டோனீஸ், கொரியன், எஸ்பெரென்டோ மற்றும் டச் மொழிகளையும் சரளமாக பேசும் வல்லமையை கொண்டுள்ளார். தான் முன்னதாக மொழிகளின் மீது பற்று கொண்டிருந்ததாகவும், மாறுபட்ட மொழிகளை கற்றுக் கொள்வதற்கு ஆர்வம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். தனது 10 வயது முதலே இந்த ஆர்வம் ஏற்பட்டதாகவும், அரேபிய மொழியை மூத்த குடும்ப உறுப்பினர்களிடம் கற்றுக் கொண்டதாகவும் ஜோசஸ் அவாட் குறிப்பிட்டார். “நான் எனது பெற்றோரிடம் அதிக மொழிகளை கற்பதற்கு உள்ள ஆர்வம் தொடர்பாகவும், மூத்த குடும்ப அங்கத்தவர்களிடம் கற்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்தேன், அவர்கள் இதற்கு மேலதிகமாக இணையத்திலும் அதிகளவான மொழிகளை கற்க முடியும் என்று கூறினார்கள்” என அவாட் தெரிவித்தார்.

மெக்ஸிக்கோவின் அகதிகள் சுமையை சுலபமாகக் குறைக்க உதவுமாறு ஐக்கிய நாடுகள் சபை கனடாவிடம் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளது.

புதிதாக புலம்பெயர்ந்துள்ள குடியேற்றவாசிகளில் மிகவும் பாதிக்கப்பட்டவர்களை மீளக்குடியமர்த்துவன் மூலம் இந்த உதவியை புரியுமாறு கோரப்பட்டுள்ளது.

குறித்த குடியேற்றவாசிகளில் பெரும்பாலும் பெண்களும், குழந்தைகளுமே உள்ளடங்குகின்றனர்.

மெக்ஸிக்கோ உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகளில் பலவித நெருக்கடிகளையும், கசப்புணர்வுகளையும் எதிர்கொண்டு தப்பிப்பிழைக்கும் மக்கள் முன் ஏற்பாடில்லாமல் வௌியேறி பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அவர்களில் பலர் உள்நாட்டு வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களாவர். இந்தநிலையில் தமது இருப்பிடங்களை விட்டு குடும்பங்களுடன் வடக்கு நோக்கி நகர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7