தனது ஐந்தாண்டு பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்பாக ஆணையாளரினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) முன்வைக்கப்பட்ட அறிக்கையொன்றிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், சூழல் பாதிப்பை குறைப்பதற்கான தமது இலக்கை அடைவதற்கு, தொடர்ச்சியாக மாறிவந்த அரசாங்கங்கள் தவறியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் காலநிலை மாற்றத்திற்கேற்ப செயற்பாடுகளை மாற்றிக்கொள்வதற்கும் அரசாங்கம் தயாராக இல்லை. இது மாற்றப்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் ஏனைய நாடுகளைவிட கனடா சராசரியாக இரண்டு மடங்கு அதிகமாக வெப்பமடைவதாக வெளியான எச்சரிக்கையை தொடர்ந்தே ஆணையாளரின் இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)