LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, March 19, 2019

சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ.காதருக்கு டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஞாபகார்த்த விருது

மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ.காதர் ஊடகத்துறைக்கு ஆற்றிவரும் சேவையைப் பாராட்டி இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.ஜே.பி.அப்துல் கலாம் ஞாபகார்த்த உன்னத சேவைக்கான விருது(SERVICE EXCELLENCE AWARD)வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.லங்கா சாதனையாளர் மன்றம் விஸ்வம் கெம்பஸ_டன் இணைந்து நடாத்திய “டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மான்புறும் சாதனையாளர் விருது விழா-2019”கடந்த 2019-03-01ஆம் திகதி கொழும்பு.07,ஹட்டன் பிளேஸ்,லைட் ஹவுஸ் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

லங்கா சாதனையாளர் மன்றத்தின் தலைவரும்,விஸ்வம் பல்கலைக்கழகத்தின் தவிசாளருமான பேராசிரியர்,கலாநிதி ஏ.டிக்ஸ்டர் பெர்னான்டோ தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாக் கலந்து கொண்ட இந்தியப் பேராசிரியர்; பத்மஸ்ரீ டாக்டர் விஜயகுமார் எஸ்.சாஹ்,சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்ட பேராசிரியர் டாக்டர் எம்.எச்.றிஸ்வி ஷரீப்,பேராசிரியர் டாக்டர்   எஸ்.எல்.றியாஸ், பேராசிரியர் டாக்டர் லக்ஸ்மன் மதுரசிங்க, சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லத்தீப் ஆகியோர் கலாபூஷணம் காதருக்கு பதக்கம் அணிவித்து சாண்றிதழ் மற்றும் விருது என்பன வழங்கி கௌரவித்தனர்.




 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7