புல்வாமா தாக்குதலுக்கு ஆதரவாக செயற்பட்டுள்ளதாக தெரிவித்து இவர் நேற்று (வியாழக்கிழமை) டெல்லி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட தீவிரவாதியிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
புல்வாமா தாக்குதலுக்கு மூளையாகச் செயற்பட்ட ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி முடாசீர் என்பவரை இம்மாத ஆரம்பத்தில் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். இந்நிலையில், இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கடந்த 14ஆம் திகதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது.






