கிழக்குமாகாண ஆளுநர் எம் எல் எ எம் ஹிஸ்புல்லா ஏறாவூர்
ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் ஒன்றை இன்று மேற்கொண்டார்
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபைத் தலைவரும் ,முன்னாள் சுகாதார
அமைச்சருமான எம் எஸ் சுபைர் அழைப்பின் பேரில் கிழக்குமாகாண ஆளுநர் எம் எல் எ எம்
ஹிஸ்புல்லா ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு இன்று விஜயம் ஒன்றை மேற்கொண்டார்
ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு விஜயத்தை மேற்கொண்ட ஆளுநர் வைத்தியசாலையில் சிகிட்சை
பெற்று வரும் நோயாளர்களை , வைத்தியசாலை கட்டிடங்களையும் பார்வையிட்டடதுடன் நிலவுகின்ற குறைபாடுகள் தொடர்பாகவும்
கேற்றரிந்துகொண்டார்
வைத்தியசாலையின் பிரதான மணடபத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில்
கலந்துகொண்ட ஆளுநரிடம் வைத்தியசாலையில் நிலவுகின்ற ஆளணி பற்றாக்குறை ,
கட்டிடங்களின் தேவைப்பாடுக போன்ற பல்வேறு விடயங்கள காணொளி மூலம் காண்பிக்கப்பட்டு
, அதன் தேவைப்பாடுகள் தொடர்பான ஆவணங்களும் ஆளுநரிடம் வைத்தியசாலை அத்தியட்சகரினால்
கையளிக்கப்பட்டது
வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் நாலிங்கம் மயூரன் தலைமையில்
நடைபெற்ற இந்நிகழ்வில் சமூக வலுவூட்டல் இராசாங்க அமைச்சர் அலி சாஹிர் மௌலானா , ,தேசிய பயிலுனர் கைத்தொழில்
பயிற்சி அதிகார சபை தலைவர் இசட் எ . நசீர் அஹமட் , முன்னாள் உற்பத்தி திறன்
அமைச்சர் பசீர் சேகுதாவூத் , கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எ எச் எம்
.அன்சார், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள்
பணிப்பாளர் எஸ் . அருள்குமரன் ,மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
திருமதி எல் எம் . நவரட்ணராஜா , , ஏறாவூர் நகர சபை தவிசாளர் அப்துல் வாசித் ,
ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் , நாகமணி கதிரவேல் , வைத்தியசாலை வைத்திய
அதிகாரிகள் ,தாதிய உத்தியோகத்தர்கள் , ஏறாவூர் நகர சபை மற்றும் ஏறாவூர் பற்று
பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்





