இந்நிகழ்வு வன்னி மாவட்ட சுதந்திரக் கட்சியின் பிரதம அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.கே.மஸ்தான் தலைமையில் வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
இம்மமாநாட்டின் நிகழ்வில் பிரதம விருந்தினராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர கலந்துகொண்டிருந்தார்.
வன்னி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்ட இக்கட்சி மாநாட்டில் வன்னி மாவட்டத்திலுள்ள 582 கிராம சேவகர் பிரிவிலும் கட்சியின் உறுப்பினர்களை நியமிப்பது, அங்கத்தவர்களை கட்சிக்குள் உள்வாங்குவது, கட்சியின் தேசியக் கொள்ளை, பொருளாதாரக் கொள்கை மற்றும் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான விளக்கங்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரால் அளிக்கப்பட்டது.