LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, March 23, 2019

போர்க்குற்ற விசாரணைகளை எதிர்கொள்ள இலங்கைத் தலைவர்களிடம் திராணி கிடையாது – கூட்டமைப்பு

போர்க்குற்ற விசாரணைகளை எதிர்கொள்வதற்கு இலங்கை அரசியல் தலைவர்களிடம் திராணி கிடையாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த ஆட்சியாளர்கள் நாட்டு மக்களை ஏமாற்றிவிட்டார்கள். அவர்களுக்கு உண்மையை எதிர்கொள்வதற்கு திராணி கிடையாது.

2015ஆம் ஆண்டில் போர்க் குற்றங்களை விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குத் தொடுநர்களை உள்ளடக்கிய கலப்புப் பொறிமுறை ஒன்றை உருவாக்க இணங்கிவிட்டு 2018ஆம் ஆண்டு அதனைச் செய்யமாட்டொம் என்று பின்வாங்கியதுடன். அதன் மூலம் நாட்டின் சுயாதீனம் காக்கப்பட்டுவிட்டது என்று கூறுகின்றனர். இத்தகையவர்களிடமி்ருந்து நீதியை எதிர்பார்ப்பது இந்த நாட்டு மக்களுடைய முட்டாள்தனமான விடயமாகத் தான் இருக்கும்.

மஹிந்த ஆட்சிக் காலத்தில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து ஒரு திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டது.  அதற்கு வடக்கு கிழக்கிலிருந்து ஒரு தமிழ் ஊடகவியலாளர் கூட விண்ணப்பிக்கவில்லை என்பதிலிருந்தே இந்த அட்சியின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை புலப்படுகிறது. வடக்கு கிழக்கில உள்ள ஊடகவிளலாளர்கள்தான் அதிகளவில் பாதிக்கப்பட்டவர்கள். ஆனாலும் அவர்கள் இழப்பீட்டுக்ககாக விண்ணப்பிக்க விரும்பவில்லை.

அந்த இழப்பீட்டுக்கான மதிப்பீடுகள் கூட கேலிக்குரியவையாகவே இருக்கின்றன. வடக்கு கிழக்கில் அதிகளவில் ஊடகவியலாளர்கள் பாதிக்கப்பட்டதற்கு பொலிஸார், படையினர் மற்றும் அவர்களோடு சேர்ந்தியங்கிய ஒட்டுக்குழுக்கள் மீதே குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன” என்று தெரிவித்தார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7