நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை மாற்றக்கோரி சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி, திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடுகின்றது. இங்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஜெயக்குமார் நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், ஜெயக்குமாரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். இதன்போது தொண்டர்கள் இருவர் தீக்குளிக்க முயற்சித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்திய நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 11ஆம் திகதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகின்றது.
தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் திகதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து, கட்சிகள் அனைத்தும் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு என்பவற்றில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





