LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, March 15, 2019

நியூசிலாந்து தாக்குதலுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: துருக்கி ஜனாதிபதி

மேற்கத்தேய நாடுகள் நடவடிக்கை எடுக்கும் வரை நியூசிலாந்தில் இடம்பெற்ற தாக்குதல் போன்று மேலும் பல தாக்குதல்கள் தொடரும் என துருக்கி ஜனாதிபதி  எர்டோகன் எச்சரித்துள்ளார்.

இஸ்தான்புல்லில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வொன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) கலந்துகொண்டிருந்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மனித இனத்துக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள இது போன்ற தாக்குதல்களை உடனடியாக தடுக்க மேற்கத்திய நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 49 பேர் உயிரிழந்துள்ளதோடு பலர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதோடு விசாரணைகள் முன்னெடுத்து வரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7