அத்துடன் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு மக்கள் சுமுகமானதொரு வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு முயற்சிக்கின்ற போது தேவையின்றிய தலையீடாகவே இது அமைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் குறித்து கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன் தற்போதைய தலையீடானது இனங்களுக்கிடையில் முறுகல் நிலையைத் தோற்றுவிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடு என்றே கருதவேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எனவே அரசாங்கத்திற்கு முதுகெலும்பு உண்டெனில் ஸ்திரமான தீர்மானமொன்றை மேற்கொண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலிருந்து விலக வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரில் இலங்கை குறித்து பிரித்தானியாவால் சமர்ப்பிக்கப்பட்ட 40/1 தீர்மானம் இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் பொறுப்புக்கூறல் கடப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கைக்கு இன்னும் இரு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.