நாடாளுமன்றத்தில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இலங்கையில் பலமாக செயற்பட்ட கூட்டுறவுத்துறை இன்று பலவீனமடிந்து இன்று பல்வேறு ஊழல்,மோசடிகளால் நிறைந்துபோயுள்ளது. இவை குறித்து எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்காத ஆணையாளர்களே உள்ளனர்.
கூட்டுறவுத்துறையின் சொத்துக்கள் விற்கப்படுகின்றன. சகல கிராமங்களிலும் கூட்டுறவுத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது. கூட்டுறவுத்துறையில் திருடுவதற்கு இடமளித்துவிட்டு உயரதிகாரிகள் தூங்குகின்றனர்.
எனவே கூட்டுறவுத்துறைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சுக்கும் கைத்தொழில், வாணிப அலுவல்கள், கூட்டுறவு அமைச்சுக்கும் இடையில் தொடர்புகள் இல்லை.
இந்நிலையில் எப்படி கைத்தொழில் முயற்சிகளை ஊக்குவிக்க முடியும்? கைத்தொழில், வாணிப அமைச்சின் கீழுள்ள காரியம் சுரங்கக் கைத்தொழிலை உடனடியாக ஜனாதிபதி வசமுள்ள சுற்றாடல்துறை அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். இச்சுரங்க கைத்தொழில் நாசமாக்கப்படுகின்றது“ என தெரிவித்துள்ளார்.