மருதமுனை மிமா சமூக சேவை அமைப்பும்,கட்டார் றொபி வரியஸ் அமைப்பும் இணைந்து மருதமுனை பிரதேச வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவுக்கு மாத்திரை வழங்கும் ஒரு தொகுதி(60.000 ஆயிரம்)சிறு காகித உறைகளை அன்பளிப்புச் செய்த நிகழ்வு அண்மையில்(16-03-2019)வைத்தியசாலையில்; பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.ஆர்.எம்.அஸ்மி தலைமையில் வைத்தியசாலையில் நடைபெற்றது.
இங்கு மிமா சமூக சேவை அமைப்பின் தலைவர் என்.எம்.அனீஸ் அஹமட், கட்டார் றொபி வரியஸ் அமைப்பின் உயர்பீட உறுப்பினர் கணக்காளர் றிஸ்வி யஹ்சர் ஆகியோருடன் இரு அமைப்பின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டு டொக்டர் ஏ.ஆர்.எம்.அஸ்மியிடம் காகித உறைகளை வழங்கியபொது பிடிக்கப்பட்ட படம்.
பி.எம்.எம்.ஏ.காதர்