
இச்சம்பவம் நேற்று வவுனியா வேப்பங்குளத்தில் இடம்பெற்றுள்ளதுடன் அவரின் இறுதிக் கிரியைகள் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.
வவுனியா வேப்பங்குளம் பகுதியில் கடந்த 5ஆம் திகதி நுண்கடன் நிறுவனங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் தொகையைச் செலுத்த முடியாத காரணத்தினால் அளவிற்கு அதிகமான மாத்திரை வில்லைகளை உட்கொண்ட நாகராசா பரமேஸ்வரி என்ற 45 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் அளவிற்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்டதால் பக்கவிளைவினை எதிர்கொண்ட குறித்த பெண் தொடர்ந்து சிகிச்சை பெற்ற நிலையில் எதுவித முன்னேற்றமும் இன்றி வைத்தியசாலையிலிருந்து வீடு செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று குறித்த பெண்மணி தனது வீட்டில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
