அத்துடன் தேசிய நலனில் அக்கறை கொண்ட மாநிலக் கட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி செயற்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
சென்னையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில், “தேசிய நலனில் அக்கறை கொண்ட மாநிலக் கட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி செயற்படுகிறது. வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்பது எமது நிலைப்பாடு.
பா.ஜ.க, அ.தி.மு.க. உள்ளடக்கிய கூட்டணி வெற்றிக் கூட்டணி. எங்களது கூட்டணி குறித்து காங்கிரஸ் – தி.மு.க. ஆகியவை ஜீரணிக்க முடியாமல் பேசி வருகிறார்கள்.
தேர்தல் கூட்டணி என்பது வேறு, இயக்கத்தில் கொள்கை என்பது வேறு. எண்ணிக்கை என்பதை விட, எண்ணத்தின் அடிப்படையில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளோம். மக்களுடைய நலன் கருதி எங்கள் கூட்டணி முடிவு செய்யப்பட்டுள்ளது. எங்களுடைய செயற்பாட்டை மதிக்கும் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.
கேட்ட தொகுதியை அ.தி.மு.க. கொடுத்துள்ளது. தஞ்சாவூர் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது” எனத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி அமைத்துள்ளன. இந்தக் கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் (புதுச்சேரி), த.மா.கா. ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7, பா.ஜ.க.வுக்கு 5, தே.மு.தி.க.வுக்கு 4, ஏனைய கட்சிகளுக்கு தலா ஒரு இடம் என தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






