அண்மைக்காலமாகவே சிறுவர் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்காரணமாகவே பூட்டப்படாத வாகனங்களில் குழந்தைகளை தனியாக விட்டுச் செல்வது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
தங்களது குழந்தைகள் குறித்து அவதானத்துடன் செயற்பட வேண்டியது பெற்றோரின் பொறுப்பு எனவும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
இவ்வாறு அவதானகுறைவுடன் செயற்படும் பெற்றோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குழந்தையின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு சட்டங்கள் காணப்படுகின்ற போதிலும், வாகனங்களில் குழந்தையை விட்டுச் செல்வது தொடர்பாக எவ்வித குறிப்பிட்ட சட்டங்களும் கனடாவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.






