இச்சம்பவம் டொராண்டோவின் ரான்டோல்ப் பகுதியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் 25 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக ரொரண்டோ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் ரொரண்டோ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.






