வின்ட்சர் George Avenue மற்றும் Reginald Street பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
இந்தநிலையில் குறித்த விபத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 22 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, அண்மைக்காலமாக கனடாவில் விபத்துக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கவலை வெளியிட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.