மெக்னிகோல் அவென்யூ மற்றும் பகுதியில், ஓசியஸ் பவுல்வர்ட் இல் நேற்று அதிகாலை 1.40 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஓசியஸ் பவுல்வர்ட் இல் சென்றுகொண்டிருந்த குறித்த அந்த பேருந்து, வீதி வளைவில் கட்டுப்பாட்டினை இழந்து, வேலி ஒன்றினை ஊடறுத்துச் சென்று, உள்ளே இருந்த வீட்டின் முன்பகுதியில் மோதியதில், அந்த வீட்டின் முகப்பு மாடம் இடிந்து வீழ்ந்துள்ளது.
இதன்போது அந்த வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் பலவும் சேதமடைந்துள்ளன. பேரூந்தின் சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அந்த வீடுகளில் இருந்தோரும் வீட்டினுள் இருந்து வெளியேற்றப்பட்டு, வீட்டினுள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதாகவும், வீடுகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் ஆய்வு செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
தாம் உறங்கிக்கொண்டிருந்த வேளையில், குண்டு வெடித்தது போன்று பாரிய சத்தம் கேட்டதாகவும், அனைத்தும் நெருங்கி வீழ்ந்த சத்தம் தம்மை உறைய வைத்ததாகவும், பாதிக்கப்பட்ட வீடுகளில் ஒன்றில் இருந்தோர் சம்பவம் தொடர்பில் விபரித்துள்ளனர்.