
இது குறித்து நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா அடர்னுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு அப்பாவி மக்கள் உயிரிழந்தது அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளோம். உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றோம். இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதோடு நியூஸிலாந்துக்கு தேவைப்படும் உதவிகளையும் அளிக்கக் தயாராக உள்ளோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நியூஸிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தியதில் 49 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, நியூசிலாந்து மற்றும் அவுஸ்ரேலியாவில் பயங்கரவாதப் தடுப்புப் படை பொலிஸார் உஷார் நிலையில் உள்ளனர். நியூஸிலாந்தில் கைது செய்யப்பட்ட 4 பேரில் ஒருவர் அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த வலதுசாரி பயங்கரவாதியும் உள்ளடங்குகிறார்.
இந்நிலையில், நியூஸிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கி சூட்டுக்கு கடும் கண்டனங்களை பல நாடுகளின் தலைவர்கள் தெரிவித்துவருகின்ற நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
