கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் வேட்பாளரைத் தெரிவு செய்வோம்.
நாம் தெரிவுசெய்யும் வேட்பாளர் நிச்சயம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு
போட்டியானவராகவே இருப்பார்.
மேலும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் தனிப்பட்டவர்களின் கருத்துக்களாகும்” என வாசுதேவ நாணயக்கார மேலும் குறிப்பிட்டுள்ளார்.






