ராமநாதபுரம் மாவட்டம், பனைக்குளம் அருகே உள்ள புதுக்குடியிருப்புக் கடலோரப் பகுதியில் மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கிக் காணப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் கடலோரக் காவல்படை பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து பொலிஸார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, 12 அடி நீளத்தில் சுமார் 800 கிலோ எடைகொண்ட சிலிண்டர் போன்ற இரும்பு பொருள் கிடந்தது. அது,ரொக்கெற்றை இயக்கக்கூடிய எரிபொருள் ராங்காக இருக்கலாம் என கருதப்படுகிறது.
இதுகுறித்து உச்சிப்புளி விமானத்தள பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. அவர்கள் வந்து அந்தப்பொருளை பார்வையிட்டனர். அத்துடன், ‘பிரமோஸ் ஏவுகணையின் ஒருபாகமாக இருக்கலாம்’ என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மர்மப்பொருளால், அப்பகுதி மீனவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
