இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன தலைமையில் நாளை(சனிக்கிழமை) இடம்பெறவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் திட்டம் 2015ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
இதன்கீழ் இதுவரையில் 35 ஆயிரத்திற்கு மேற்பட்ட இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
