‘விமானத்தில் கோளாறு ஏற்படும்போது, புதிய பாதுகாப்பு எச்சரிக்கை அம்சம் விபத்துக்களைத் தவிர்க்க உதவியாக இருக்கும். முன்னதாக அந்தப் பாதுகாப்பு அம்சம் அவசியமற்ற ஒன்றாக இருந்தது. தற்போது இந்த மென்பொருள் மேம்படுத்தல் அத்தியாவசியமாகியுள்ளது.
விபத்துக்குள்ளான இந்தோனேஷிய லயன் எயார் விமானத்திலும் எத்தியோப்பியன் எயார்லைன்ஸ் விமானத்திலும் மேம்படுத்தப்பட்ட எச்சரிக்கை மென்பொருள் இல்லை. இது தொடர்பில் விமான சேவைகளும் கேட்கவில்லை’ என போயிங் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை 737 ரக விமானங்களின் மென்பொருள் மேம்பாடு இறுதிக் கட்டத்தில் இருப்பதாக போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






