மூன்று இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மேலும் 23 பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுவதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டின் பல பகுதிகளில் இன்று பாரசீக புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ‘நவ்ரோஸ்’ (Nowroz) என்றழைக்கப்படும் புத்தாண்டை முன்னிட்டு பால்க் நகரில் நடைபெற்ற புத்தாண்டு விழாவில் ஜனாதிபதி அஷ்ரப் கானி பங்கேற்று உரையாற்றினார்.
இந்த கொண்டாட்டங்களுக்கு இடையில் தலைநகர் காபுலின் மேற்கு பகுதியில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் அங்கு கூடியிருந்தவர்களில் சிலர் உயிரிழந்தனர்.
கார்ட் இ சக்ஹி மற்றும் ஜமால் மினா பகுதிகளில் இரண்டு எறிகணைகள் மற்றும் கையெறி குண்டுகளை வீசி பயங்கரவாதிகள் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும், இந்த தாக்குதலுக்கு தலிபான்கள் உட்பட எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






