அளவிற்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றமையே இந்த விபத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மேலும் 30 பேர் வரை காணாமல் போயுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோட்காட்டி ஈரான் மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் செய்தி வௌியிட்டுள்ளது.
100 க்கும் மேற்பட்ட பயணிகள் குறித்த படகில் பயணித்ததாகவும், அவர்கள் நீந்திக் கரையேறுவதற்கு முடியாமையாலேயே உயிரிழக்க நேரிட்டதாகவும் மொசூல் குடியியல் பாதுகாப்பு முகவரகம் தெரிவித்துள்ளது.
எனினும், படகில் சிக்கியிருந்த எஞ்சியவர்களை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர். குறித்த படகு ஒரு சுற்றுலாத் தீவுக்கு சென்று கொண்டிருந்த போதே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளது.






