சீனாவின் ஹுனான் மாகாணத்தில் இந்த விபத்து நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
50 க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் வேகமாக சென்று கொண்டிருந்த பேருந்தின் ஒருபகுதியில் தீப்பிடித்ததை அடுத்து பேருந்து முழுவதும் தீ பரவியுள்ளது.
இந்நிலையில் உடனடியாக தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதன் பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு விபத்து தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.






