இச்சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது. கத்தியால் குத்தப்பட்ட குறித்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் உறவினர்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதோடு மரண பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன. படுகொலை தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனினும் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு லண்டனில் மேற்கொள்ளப்பட்ட 18 வது கொலையாகவும், ஐந்தாவது பதின்ம வயது கொலையாகவும் இது பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டு லண்டனில் 17 மற்றும் 18 வயதான இரு பதின்ம வயது பெண்களும் வயதான பெண் ஒருவரும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
