இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்ரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய அவுஸ்ரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 236 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அவுஸ்ரேலிய அணியின் அதிகபட்ச ஓட்டமாக உஸ்மான் கவாஜா 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் மொஹமட் ஷமி, பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து பதிலுக்கு 237 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களம் இறங்கிய இந்திய அணி 48.2 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை மாத்திரமே இழந்து 240 ஓட்டங்களை பெற்று 6 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் கேதர் யாதவ் 81 ஓட்டங்களையும், டோனி 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒன்றுக்கு பூச்சியம் என்ற அடிப்படையில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.
