சட்டவிரோத பணப்பரிவர்த்தன வழக்கில் 59 வயதான மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீன் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.1.5 பில்லியன் டொலர்கள் மோசடி செய்த வழக்கிலேயே அப்துல்லா யாமீனை கைது செய்யுமாறு மாலைதீவு நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) உத்தரவிட்டுள்ளது.
அத்தோடு அவரை மோசடி குற்றச்சாட்டுக்கள் விசாரணைகள் முடிவடையும் வரை தடுப்பு காவலில் வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் சுற்றுலா வருவாயில் 79 மில்லியனுக்கும் மேலான தொகையை, அப்துல்லா யாமீன் தனது வங்கி கணக்கில் இருந்து ஒரு தனியார் நிறுவனத்திற்கு பணம் அனுப்பிய குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





