அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட 20வது திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலின் போது, முன்மொழியப்பட்ட 20 வது திருத்தம் மீதான ஆட்சேபனைகளை அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இதன் போது முஸ்லிம் அரசியல் கட்சியின் கருத்து அவர்களுடைய சமூகத்தின் கருத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.





