அறுவடை ஆரம்பித்த போதிலும் நெல்லை கொள்வனவு செய்வதற்கு எந்தவொரு திட்டத்தையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என அனைத்து அகில இலங்கை விவசாய சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.தம்புள்ளையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அகில இலங்கை விவசாய சங்கத்தின் அமைப்பாளர் நாமல் கருணாரட்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நெல் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டாலும் அதனை கொள்வனவு செய்வதற்கு ஒரு திட்டம் இன்மையால் விவசாயிகள் பெரும் ஆபத்தில் உள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.
விவசாயிகள் மற்றும் நுகர்வோரை பாதுகாப்பதற்காக அரசாங்கம் இந்த விடயத்தில் தலையீடு செய்ய வேண்டும் என நாமல் கருணாரட்ன மேலும் தெரிவித்தார்.





