பிரிட்டிஷ் கொலம்பியாவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.இந்த துப்பாக்கி பிரயோகம் நேற்று(வெள்ளிக்கிழமை) மாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, அண்மைக்காலமாக இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.





