பிரம்டன் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.டொர்ப்ரம் வீதி மற்றும ஸ்டீல்ஸ் அவனியூ பகுதியில் இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச் சூட்டின் போது, 28 வயது ஆண் ஒருவர், உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவ்விடத்தில் அவர் சுடப்பட்டார் என்பது சரியாக தெரியவில்லை என்ற போதிலும், வாகனம் ஒன்றிலிருந்து அங்கிருந்த வர்த்தக நிலையம் ஒன்றுக்கு சென்ற அவர் உதவி கோரியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்தச் சம்பம் தொடர்பாக இதுவரை எவரும் கைதுசெய்யப்படாத நிலையில், இதுகுறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக்கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடன் கேட்டுக்கொண்டுள்ளனர்.





