சபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி இதனை தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு சபையின் தன்னிச்சையான செயற்பாடுகளை நிவர்த்திக்க அதன் தலைவரான சபாநாயகர் நடவடிக்கை எடுக்காமைக்கு எதிராகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
நாடாளுமன்ற குழு கூடி இது தொடர்பான இறுதி தீரமானத்தை எட்டவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி குறிப்பிட்டுள்ளார்.
இதற்குரிய நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.





