கனடாவின் பெரும்பாலான நகரங்கள் இன்னும் அறுபது ஆண்டுகளில் அதிக வெப்பத்துடன் கூடிய கால நிலைகளை பதிவு செய்யும் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.நேச்சர் கொம்யூனிகேஷன்ஸ் என்னும் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட புவியியல் ஆய்வு அறிக்கையிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் 540 நகரங்களில் தற்போதைய காலநிலைக்கும் இன்னும் 60 ஆண்டுக்கு பின்னரான கால நிலைக்கும் இடையில் பாரிய வேறுபாட்டை உணர முடியும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எட்மண்டன் நகரில் தற்பொழுது சராசரி வெப்பநிலை 15 பாகை செல்சியஸ் ஆக காணப்படுகின்றது எனினும் 60 ஆண்டுகளுக்குப் பின்னர் வெப்பநிலை 5 பாகை செல்சியஸ் ஆனால் உயர்வடையும் என தெரிவிக்கப்படுகிறது.
அவ்வாறே ரொறன்ரோ, ஒட்டாவா, மொன்றியல் போன்ற நகரங்களின் சராசரி வெப்பநிலை முறையே 2.9, 6.1, 9.5 பாகை செல்சியஸ் உயர்வடையும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.





