கனடிய மக்களின் வாழ்க்கையில் ஏற்படப்போகும் ஆரோக்கியமான மாற்றத்தை எதிர்க்கும் வகையில், சில தரப்பினர் ஈடுபட்டு வருவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ் சுமத்தியுள்ளார்.சில அரசியல் தலைவர்கள் தனிப்பட்ட ரீதியில் செயற்பட்டுவதாகவும், இது ஒட்டுமொத்த மக்களின் நலநன பாதிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக முதல்வர் டக் போர்ட் உள்ளிட்ட சில தரப்பினர் இவ்வாறு செயற்பட்டு வருவது வருத்தமளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், காலநிலை மாற்றம் தொடர்பான திட்டங்களை அமல்படுத்துவதற்கு சில அரசியல் கட்சிகள் தடை ஏற்படுத்தி வருவது கவலை அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
சஸ்கட்ச்வான் மற்றும் ஒன்றாரியோ ஆகிய மாகாணங்களை ஆட்சி செய்யும் முதல்வர்கள் காலநிலை மாற்றம் குறித்த அரசாங்கத்தின் திட்டங்களை அமல்படுத்துவதற்கு தடை ஏற்படுத்தி வருகின்றனர் என அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.





