பிரித்தானிய இளவரசர் சார்ளஸ், தனது பாரியாருடன் எதிர்வரும் மார்ச் மாதம் கியூபாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.இதன்மூலம் கியூபாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளும் அரச குடும்பத்தின் முதலாவது உறுப்பினராக இளவரசர் சார்ள்ஸ் விளங்கவுள்ளார்.
இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இளவரசரின் இவ்விஜயம் அமையவுள்ளது.
பத்து தீவு நாடுகளுக்கான இளவரசரின் பரந்த விஜயத்தின் ஒரு அங்கமாக கியூபாவிற்கான இவ்விஜயம் அமையவுள்ளது.
பிரித்தானியாவிலிருந்து சுதந்திரம் அடைந்த கிழக்கு கரீபியன் தீவு நாட்டின் 40ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் செயிண்ட் லூசியாவிலிருந்து இளவரசரின் பயணம் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





