பிரெக்ஸிற், பிரான்ஸ்- ஜேர்மன் போன்ற நேட்டோ உறுப்பு நாடுகளுடனான பிரித்தானியாவின் பாதுகாப்பு ஒத்துழைப்பை பாதிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த மூன்று நாடுகளின் உளவுத்துறை தலைவர்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) இதனை தெரிவித்துள்ளனர்.
முனிச்சில் நேற்று ஆரம்பமான பாதுகாப்பு மாநாட்டில் கலந்துக் கொண்டு பின்னர் கூட்டாக ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர்கள் இதனை குறிப்பிட்டார்.
மேலும், இஸ்லாமியவாதம், பயங்கரவாதம், இணைய தாக்குதல்கள் போன்ற அச்சுறுத்தல்களிலிருந்து ஐரோப்பாவை பாதுகாப்பதற்கு தாம் கூட்டாக செயற்படப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ், ஜேர்மன், பிரித்தானியா ஆகிய நாடுகளின் உளவுத்துறை தலைவர்களை இவ்வாறு ஒரே அரங்கில் காண்பது மிகவும் அரிது என்பது குறிப்பிடத்தக்கது.





