ஜோதிகா நடித்த ‘காற்றின் மொழி’, ‘செக்க சிவந்த வானம்’ ஆகிய திரைப்படங்கள் நல்ல வெற்றியை பெற்றது.இந்த நிலையில் ஜோதிகாவின் புதிய திரபை்படம் ஒன்றின் பூஜை இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் இடம்பெற்றது. இந்த பூஜையில் நடிகர் சூர்யாவுடன் ஜோதிகா கலந்து கொண்டார்.
இந்த படத்தில் ஜோதிகாவுடன் முக்கிய வேடத்தில் நடிகை ரேவதி இணைந்துள்ளார். எஸ்.கல்யாண் இயக்கும் இத்திரைப்படத்தில் யோகிபாபு, ஆனந்த்பாபு, மன்சூரலிகான் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இத்திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கின்றார்.
மேலும், இத்திரைப்படம் ஒரு குறுகிய கால தயாரிப்பு என்றும், எதிர்வரும் ஜூன் அல்லது ஜூலையில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.





