LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, February 16, 2019

டுவிட்டர் பதிவினால் ஏற்பட்ட சர்ச்சை: மன்னிப்பு கோரினார் அமைச்சர் லீசா மெக்லார்ட்!

ஓட்டிசத்துக்கான சிகிச்சை தொடர்பில் டுவிட்டரில் சர்ச்சையான பதவினை வெளியிட்ட ஒன்றாரியோவின் சமூக சேவைகள் அமைச்சர் லீசா மெக்லார்ட், மன்னிப்பு கோரியுள்ளார்.

ஓட்டிசம் எனப்படும் மன இறுக்க நோய் சிகிச்சை முறைமை தொடர்பில் வெளியிட்ட கருத்து ஏதேனும் வகையில் யாரையும் காயப்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது டுவிட்டர்; பதிவு யாரையேனும் அச்சுறுத்தும் வகையிலோ அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையிலோ அமைந்திருந்தால் அதற்காக வருந்துவதாகவும் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் மற்றுமொரு டுவிட்டர் பதிவில் லீசா தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த அரசாங்கத்தினால் கைவிடப்பட்ட 23000 ஓட்டிசத்தால்; பாதிக்கப்பட்ட சிறார்களின் நலனை முதனிலை நோக்காகக் கொண்டு செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஓட்டிசத்துக்கான சிகிச்சை தொடர்பிலான புதிய திட்டத்திற்கு ஆதரவளிக்காதோர் பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்க நேரிடலாம் என்று அமைச்சர் லீசா டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் எச்சரித்திருந்தார்.

இந்த டுவிட்டர் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததுடன் பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை வெளியிட்டிருந்த நிலையில் அவர் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7