LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, February 22, 2019

வாழைச்சேனை இந்துக்கல்லூரி மாணவன் ஸேஷானந் சனாதிபதியினால் கௌரவிப்பு

                                                          (ஜெ.ஜெய்ஷிகன்)
கல்குடா கல்வி வலய கோறளைப்பற்றுக் கோட்டத்தில் அமைந்துள்ள வாழைச்சேனை இந்துக்கல்லூரி உயர்தர கலைப்பிரிவு மாணவன் மகேந்திரலிங்கம் ஸேஷானந் அதிமேதகு சனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேன அவர்களால் பதக்கம் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கபப்ட்டார். 
தேசிய சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித் திட்டத்தின் சனாதிபதி பதக்களிப்பு நிகழ்வு கடந்த 30.01.2019ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் சனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

சனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேன தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 06 மாணவர்கள் சனாதிபதி பதக்கம் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மத்திய சுற்றாடல் அதிகார சபையும் கல்வி அமைச்சும் இணைந்து நாடளாவிய ரீதியில் நடாத்தும் தேசிய சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித் திட்டத்தின் 5வதும் இறுதியுமான சனாதிபதி பதக்கம் பெற்ற முதலாவது தொகுதி சுற்றாடல் முன்னோடி மாணவர்கள் மேற் குறித்த மாணவர்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. 

கல்குடா வலயத்திற்கு பெருமை சேர்த்த மாணவனிடம் இது பற்றி வினவிய போது குறித்த பதக்கத்தைப் பெறுவதற்கு என்னை வழிப்படுத்திய அதிபர் அ.ஜெயஐPவன், பொறுப்பாசிரியை திருமதி. ச.துரைசிங்கம் சுற்றாடல் உத்தியோகத்தர் திருமதி.த.யசோதரன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை இச் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன். 

   






 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7