மூன்று தசாப்த யுத்த வடுக்களின் தாயக பூமியான படுவான் மண் உண்மையில் இன்று பூரித்திருக்கும்.மட்டக்களப்பு அம்பிளாந்துறையில் முருகேசு – பொன்னம்மா தம்பதியினருக்கு கடைப்புதல்வனாகப்பிறந்து இன்று படுவான் மண்ணை தமிழக ஆளுநரின் கரங்களுக்கருகில் அழைத்துச் சென்றிருக்கும் கலாநிதி முருகு தயாநிதி அவர்கள் பாராட்டுக்குரியவர்.
அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயம் மற்றும் குருக்கள்மடம் வாணி வித்யாலயம்என்பவற்றில் ஆரம்பக்கல்வியைக் கற்று பேராதனை பல்கலைக்கழகத்தில் தனது இதர பட்டப்படிப்புகளை பூர்த்தி செய்து இன்று இந்தியாவில் தமிழகத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதி பட்ட ஆய்வை பூர்த்தி செய்து தமிழக ஆளுநர் மாண்புமிகு பன்வாரிலால் புரோகித் அவர்களது கரங்களால் தனது முனைவர் பட்ட ஆய்வின் பட்ட மகுடத்தை பெற்றிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.