சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா மற்றும் விசாகன் ஆகியோரின் திருமணம் நளை (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது.நான்கு நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள இவர்களின் திருமணத்தின் வரவேற்பு நிகழ்வு நேற்று முன்தினம் ராகவேந்திர திருமண மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த திருமண வரவேற்பு நிகழ்வில் ரஜினிக்கு மிக நெருங்கிய உறவுகள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு விதைகள் அடங்கிய பை அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டில் ராதா கல்யாண வைபவம் நடைபெறுவதுடன் நாளை திருமணம் நடைபெறவுள்ளது.
இதனை தொடர்ந்து எம்.ஆர்.சி நகரில் உள்ள லீலா பலஸ் நட்சத்திர ஹோட்டலில் வரவேற்பு நடைபெறவுள்ளது. இதில் சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.





