2017ம் ஆண்டு, ஒரு கோல்ப் கிளப் மற்றும் பட்சர் கத்தியைக் கொண்டு தொழிலாளர்களைத் தாக்கியதன் பின்னர் நான்கு பயங்கரவாதத் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் ரிஹாப் தும்கோஷ் என்ற பெண் மீது சுமத்தப்பட்டது.
மேலும் குறித்த பெண் முன்னர் ISIL இல் சேர சிரியாவிற்கு பயணம் செல்ல முயன்றார் என்ற குற்றச்சாட்டும் இந்த குற்றச்சாட்டுகளில் ஒன்று என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அவருக்கு 8 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த வலக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதி தும்கோஷின் மனநல மதிப்பீட்டையும், தண்டனையை தீர்மானிப்பதற்கு முன்னர் சிறையில் இருந்த அவரது சிகிச்சை பதிவுகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.






