துருக்கியில் இடம்பெற்ற கட்டட விபத்தில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தின் கர்தால் மாவட்டத்தில் எட்டு மாடி கட்டிடம் ஒன்று கடந்த புதன்கிழமை சரிந்து வீழ்ந்தது.
இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன. இதற்கிடையே, மேலும் 11 பேரின் சடலங்கள் நேற்று முந்தினம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், எஞ்சியவர்களின் சடலங்கள் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





