பட்டாசு ஆலைகளை திறப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகின்றது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.சிவகாசியில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற மேல்நிலைப்பாடசாலையின் 25ஆம் ஆண்டு விழா நிகழ்வென்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் அமைச்சர் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.
இதனைத் தொடர்ந்து அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பட்டாசு ஆலைகளை விரைவில் திறக்க அனைத்து விதமான நடவடிக்கைகளிலும் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.
கல்வி செல்வம்தான் அழியா செல்வம். கல்வியில் சிறந்த நாட்டில் பொருளாதாரம் உயரும். சமூக அக்கறையோடு இந்த பாடசாலை செயல்பட்டு வருகின்றது.
பட்டாசு ஆலைகளில் தற்போது வேலையின்றி உள்ளதால் கல்வி கட்டணத்தில் இந்த பாடசாலை சிறப்பு சலுகை கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார்.





